search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் தொகுப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலெக்டர் பாராட்டு
    • கூட்டம் கூடுவதை தவிர்த்து டோக்கன் வழங்கி விநியோகிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங் கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:-

    தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங் கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, கடந்த 9-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

    • சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    • கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் மத்தூர், அத்திகானூர் ,கண்ணன்ட ஹள்ளி, நடுப்பட்டி, கருங்காலிப்பட்டி, சிவம்பட்டி, வாலிப்பட்டி, களர்பதி , பள்ளத்தூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் தமிழக அரசு அறிவித்த இலவச பொங்கல் தொகுப்பினை மத்தூர் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் குணவசந்தரசு தலைமையில் ரூ.1000 , ம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், ஒன்றிய துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி செயலாளர் கமலநாதன், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமை குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி ஒன்றிய இளைஞரணி பொருப்பாளர் சத்தியமூர்த்தி கண்ணன் டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் மோகன் குமார், வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, சிவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி சரவணன், கண்ணடஹள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் டைகர் பாலு, வாலிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சபிதா சேட்டு, கண்ணன் டஹள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் பெருமக்கள் முருகன், கட்சி நிர்வாகிகளான ஜெகதீசன், வேளாவள்ளி வீரமணி, கண்ணுகானூர் குமார், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கபட்டது
    • பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் தலைமையில் பொங்க தொகுப்பு வழங்கப்பட்ட நிகழ்வில் கிளைச் செயலாளர் முத்துவீர் பாலாஜி, வடிவேல், வீரமணி, தர்மராஜ், மதி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைதியாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக் கள் வாங்கிச்சென்றனர். விழாவில் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






    • சிவகாசியில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் மேயர் வழங்கினார்.
    • சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சியில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஸ்பிரியா தொடங்கி வைத்தனர்.

    தி.மு.க., மாநகர செய லாளர் உதயசூரியன், பகுதிகழக செயலாளர் காளிராஜன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சக்திவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் இன்பம், ராஜேஸ், பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் வார்டு கவுன்சிலர்கள் ரேணு நித்திலா, ராஜேஷ், உள்ளிட்டோர் அவரவர் வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில், பயனாளி களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

    சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார். இதேபோல் தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, ஆனையூர் ஊராட்சியில் பொறுப்பு தலைவர் முத்துமாரி, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், அனுப்பன்கு ளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் கருப்பசாமி, பள்ளபட்டி ஊராட்சியில் பொறுப்பு தலை வர் ராஜபாண்டி, பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

    • ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர்
    • பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனர்.

    டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி நேரம் அடிப்படையில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    முதல் நாளான இன்று அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து ரேசன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி பழுதானது.

    சர்வர் பிரச்சினை காரணமாக இந்த கருவிகள் அனைத்து ரேசன் கடைகளிலும் இயங்க வில்லை. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவி டப்பட்டது.

    அதன்படி அனைத்து ரேசன் கடைகளிலும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.45 லட்சம் ரேசன் அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 376 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன் வரவேற்றார்.

    ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், ஒன்றியக்குழு தலைவர் வெங்கடரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒரு கிலோ அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, ரூ.1000 பணம் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசியதாவது:-

    இந்த பொங்கல் தொகுப்பு இன்று முதல் 12-ந்தேதி வரையில் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனைத்து ரேசன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் சர்க்கரை, ரொக்கம் ரூ.1000 வழங்க ஏதுவாக முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையில் வாங்க தவறியவர்கள் வரும் 13-ந்தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,45,075 குடும்பங்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகரமன்ற உறுப்பினர் வினோத், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, துணை பதிவாளர் சந்திரன், தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன், நகர செயலாளர் பூங்காவனன் உள்பட அரசு அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொது விநியோக துணை பதிவாளர் சிவமணி நன்றி கூறினார்.

    • சங்க உறுப்பினர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு, பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம்.
    • இந்த ஆண்டு, 50-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு, அரிசி, மரச்செக்கு எண்ணெய், மற்றும் பணத்தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றியங்களை உள்ளடக்கிய, புகைப்படத் துறையில் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து கடந்த பத்து ஆண்டுகளாக சங்கம் நடத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு, பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டு, 50-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு, அரிசி, மரச்செக்கு எண்ணெய், மற்றும் பணத்தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட புகைப்பட சங்க தலைவர் பொருளாளர் இணை செயலாளர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

    • கலெக்டர் தகவல்
    • டோக்கன்கள் வினியோகம் தீவிரம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,44,679 மொத்த அரிசி குடும்ப அட்டைதாரர்களும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்ப அட்டை 376 குடும்பங்களும், சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1,000 வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை 9.01.2023 முதல் - அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னர் வரை வழங்கப்படும்.

    மேலும் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை வீடு தோறும் சென்று ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

    குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் வந்தாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும்.

    மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172-2271766-க்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
    • பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதன்படி இன்று முதல் வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 1,183 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறும். இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

    அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அது குறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    • 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

    முதல்-அைமச்சர் இந்த ஆண்டுதைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்பஅட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடை களிலும் நடை முறையில் உள்ள 6,14,906 அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் 434மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வுள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற ஏது வாக குடும்ப அடடை தாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை (3-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை விடுமுறை தினமான 6-ந் தேி நீங்கலாக டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகப் பணியினை 9-ந் தேதி அன்று தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னரே 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும். கூட்ட நெரி சலை தவிர்க்கும் பொருட்டு ரேசன் கடை பணியாளர் கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று பொது மக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்படும். 

    குடும்ப அட்டை தாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசுமற்றும் ரொக்கப்பணம் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146- 229854 மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இயங்கி வரும் தொலை பேசி எண் 04146-229884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தை பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தை பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகளில் 5,58,934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர்.

    மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×